×

10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏஐ எழுத்தறிவுத் திட்டம்

 

புதுடெல்லி: பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏஐ எழுத்தறிவு திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ”ஆசிரியர்களுக்கான ஏஐ எழுத்தறிவு திட்டம் எனப்படும் இந்த முன்னெடுப்பு இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் உருவாக்கப்பட்ட கல்விக்கான ஏஐ சிறப்பு மையமான போதன் ஏஐ அமைப்பால் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதையும், கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டு, பாடம் திட்டமிடல், உள்ளடக்க உருவாக்கம், மதிப்பீடுகள் மற்றும் மாணவர் கருத்து பரிமாற்ற அமைப்புகள் உள்ளிட்ட வழக்கமான கற்பித்தல் நடைமுறைகளில் ஏஐ-யை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 2027ம் ஆண்டிற்குள் அன்றாட வகுப்பறை கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : New Delhi ,Union Government ,Indian Institute of Technology… ,
× RELATED நடிகரின் ரூ.30,000 கோடி சொத்து தகராறை...