ஜபல்பூர்: மபியில் ஜபல்பூரில் உள்ள கமரியா தீவு அருகே, பர்கி அணை பகுதியில் நர்மதை ஆற்றில் சுற்றுலாத்துறையால் இயக்கப்படும் உல்லாச படகில் 29 சுற்றுலாப் பயணிகள் சவாரி சென்றனர். அப்போது திடீரென வானிலை மாறி கடும் காற்று விசியது. இதில் படகு நிலைதடுமாறி கொந்தளிப்பான நீரில் மூழ்கியது. இதில் 4 பேர் பலியானார்கள். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் 8 பேரை காணவில்லை.
