மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு அரசு ஊழியரின் மீது சேற்று நீரை ஊற்றி, சகதியில் நடக்க வைத்து துன்புறுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்றும், அரசு ஊழியரை பொதுவெளியில் இழிவுபடுத்த கூடாது என்றும் நீதிபதி தேஷ்முக் தெரிவித்தார்.
