×

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம்: ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களை தேடி வருகிறோம் எனவும் வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags : firecracker ,Virudhunagar ,District Collector ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள்