நியூ சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29வது லீக் போட்டி நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பஞ்சாப் – லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 254 ரன்களை குவித்தது. 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்க உள்ளது.
