×

இமாச்சலில் கனமழையால் நிலச்சரிவு; கார்கள் மண்ணில் புதைந்தன: ஏராளமான வீடுகள் சேதம்

 

இமாச்சல்: சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மிதமான முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சிம்லாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லா, புறநகர் பகுதியான மொகல் ராஜனாவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சிம்லா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் கார்கள் மண்ணில் புதைந்தன.

இமாச்சலில் ஆறுகள், நீர்நிலையை ஒட்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிம்லா, குலு, சாம்பா, பிலாஸ்பூர், சர்மவுர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

 

Tags : Imachal ,Shimla ,Himachal Pradesh ,Mogal Rajana ,
× RELATED தவெகவினர் எம்எல்ஏ திருடர்கள்;...