*திருப்பதி கலெக்டர் பேச்சு
திருப்பதி : திருப்பதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அவர் பின்னர் பேசியதாவது :
பொது குறைதீர்ப்பு தளத்தில் பெறப்படும் மனுக்களுக்கு தரமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். மனுதாரர்களின் பிரச்சனைகள் புறக்கணிக்கப்படக்கூடாது. மனுதாரருக்கு திருப்தி அளிக்கும் வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும். மனுக்கள் புறக்கணிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.
நேற்றைய கூட்டத்தில் வருவாய் துறை 176, பஞ்சாயத்து ராஜ் துறை -30, நகராட்சி நிர்வாகம்- 16, கிராமப்புற வறுமை- 14, காவல்துறை -13, நீர்வளம் -5, சுவர்ண கிராமம் / சுவர்ண வார்டு -5, நில அளவைத் துறை- 5, பள்ளிக் கல்வி -4, உறைவிடப் பள்ளிகள் -4, ஊரக வளர்ச்சி -4, குடிமைப் பொருள் வழங்கல் -3, சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி நீர் துறை -3, மின்சாரத் துறை -3, வீட்டுவசதி- 3, ஊரக நீர் வழங்கல் பொறியியல் துறை -3,
சாலை மற்றும் கட்டிடங்கள்- 3, அறநிலையத்துறை -3, வட்டாரப் போக்குவரத்துக் கழகம்- 3, மீன்வளத் துறை- 2, தொழிற்துறை -2, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலத்துறை- 2, சமூக நலத்துறை -1, துதா- 1, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்- 1, திறன் மேம்பாட்டுக் கழகம்- 1, கரும்புத் தொழில்- 1, பொது சுகாதாரம் -1, வனத்துறை- 1, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை- 1, விரிவான கல்வி- 1, வேளாண்மைத் துறை- 1, பதிவு துறை-1 உள்ளிட்ட 317 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
