சாத்தூர், ஆக. 4: தென்மாவட்ட மக்களின் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இநிந்கழ்ச்சியில் இணை ஆணையர் இளங்கோ, பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர்கள், அதிகாரிகள், உள்பட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வரும் ஆக.7ம் தேதி கொடியேற்றம் தொடங்குகிறது.ஆக.14ம் தேதி ஆடி கடைசி வெள்ளி திருவிழா கொண்டாடப்படுகிறது.
