முன்னாள் தமிழக அமைச்சரை தெரியும் என்று சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நண்பனிடம் ரூ.5 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, ஜூலை 28: புதுச்சேரி சாரம் வெண்ணிலா நகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி பச்சையம்மாள் தனியார் காப்பீடு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, பிரசாந்த்தின் கல்லூரி நண்பன் காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசனை கடந்த 2024ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். பின்பு சிலம்பரசன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சரிடம் உதவியாளராக பணியாற்றி வருவதாவும், அவர் நினைத்தால் தமிழ்நாட்டில் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்றும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளார். சிலம்பரசன் கூறியதை நம்பி, 2024ம் ஆண்டு ரூ.1.5 லட்சத்தை பிரசாந்த் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து பிரசாந்த் ரூ.3.50 லட்சம் தயார் செய்து சிலம்பரசனிடம் கொடுத்துள்ளார். அப்போது 2 நாட்களுக்குப்பிறகு வேலைக்கான ஆர்டர் பெற்றுத்தருவதாக கூறி சென்றுள்ளார்.

ஆனால், கூறியபடி வேலைக்கான ஆர்டர் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பிரசாந்த் போன் செய்து சிலம்பரசனிடம் கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தான், பொய்யான வாக்குறுதி கொடுத்து, வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி சிலம்பரசன் ரூ.5 லட்சத்தை திட்டமிட்டே மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பிரசாந்த், ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிலம்பசரன் மீது போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். அதேசமயம், லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயா என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிலம்பரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைதிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories: