டெல்லி: பிரதமர் மோடி இல்லம் அருகே தரையில் படுத்து போராடிய ராகுல் காந்தியை, காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பலவந்தமாக கைது செய்ததால் ராகுல் காந்திக்கு மூக்கு அருகே காயம், ரத்தக் கசிவு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் காயம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
