டெல்லி: நீட் வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை கோரி பிரதமர் இல்லம் நோக்கி காங்கிரஸ் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லியில் மாணவர்களுக்கு ஆதரவாக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
