மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்த மனு மீது 15ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும். நாள்தோறும் பிற்பகல் 2:15 மணி முதல் வாதங்களை தொடங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு அளித்துள்ளது. முதலில் சிபிஐ தரப்பு வழக்கறிஞரும், அடுத்ததாக குற்றவாளிகள் ஒன்பது பேரும் வாதங்களை முன்வைக்க ஆணையிட்டுள்ளது. இரட்டை தூக்கு தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள், தண்டனையை உறுதிப்படுத்த கோரிய மனுக்கள் மீது உத்தரவு அளித்துள்ளது.
