சென்னை: சென்னை மத்திய குற்ற பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்காக ஆஜரானார். மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
