×

கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா பங்கேற்கிறது

டெல்லி: மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பாக அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக இருவர் பங்கேற்க உள்ளனர். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க இடையேயான போரின் போது கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரானின் முத்த தலைவரான அயதுல்லா அலி கமேனி அமெரிக்க படைகள் நடத்திய கூட்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அவரின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஈரான் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் ஊர்வலமாக தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் பிரியாவிடை நிகழ்ச்சிகளும், ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலமும் நடைபெறும், அதைத்தொடர்ந்து, ஜூலை 7-ல் புனித நகரான கோமில் சிறப்பு தொழுகையும், ஜூலை 9-ல் மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் விடுத்த அழைப்பை ஏற்று, இந்திய அரசு சார்பில் இந்த இரு உயர்மட்ட பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணங்கள் உள்ளதால் அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

இதனால் இந்த இறுதி சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில கவர்னர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா சார்பில் தங்களது அதிகாரப்பூர்வ அஞ்சலியை செலுத்தி இரங்கல் தெரிவிக்கவுள்ளனர்.

Tags : India ,Khamenei ,Delhi ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,Minister of State for External Affairs ,Pavitra Margherita ,Bihar ,Governor ,Syed Ata Hasnain ,
× RELATED டெல்லி பாஜக அரசு அறிவித்துள்ள மின்சார...