×

பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம்

 

கிருஷ்ணகிரி, ஜூன் 25: கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி, பள்ளியின் செயலாளர் டாக்டர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும், யோகாவினை மக்களிடையே சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, அனைத்து மாணவ, மாணவிகளும் பல்வேறு விதமான யோகாசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத் பள்ளி குழுமங்களின் நிறுவனர் மணி பேசுகையில், ‘யோகாசனம் என்பது உடல் வலிமையை மட்டும் அல்லாது, மனதளவிலும் திடத்தை ஏற்படுத்தும். வாழ்வில் அனைவரும் வயது பேதமின்றி செய்யத்தகுந்த ஒரு சிறந்த உடற்பயிற்சி யோகாசனம்,’ என்றார். தொடர்ந்து யோகாசனத்தால் ஏற்படும் பயன்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் நரேந்திரநாத் ரெட்டி, துணை முதல்வர் ஜெயமோல் தாமஸ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

Tags : Yoga Day ,Bharat International Higher Secondary School ,Krishnagiri ,International Yoga Day ,Mani ,Principal ,Krishnaveni ,Dr. ,Santosh ,
× RELATED ஓசூர் பேருந்து நிலையத்தில்...