×

கூட்டுறவு சங்க பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: இணை பதிவாளர் தகவல்

திருவள்ளூர்: கூட்டுறவு சங்க பணிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் சண்முகவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்களில் எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணியாளர்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன.

இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை திருவள்ளூர் அடுத்த காக்களூர், சி.சி.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர், ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை திருவள்ளூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான https://www.drbtvl.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் 7338749108 மற்றும் 044 – 27662622 என்ற தொலைபேசி எண் அல்லது jrtlr.rcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post கூட்டுறவு சங்க பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: இணை பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Dinakaran ,
× RELATED ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல்...