×

மர பொம்மை எனக்கூறி பார்சலில் கஞ்சா கடத்தல்..!!

மதுரை: மர பொம்மைகள் என கூறி ஆந்திராவில் இருந்து மதுரைக்கு அனுப்பிய பார்சலில் 24 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரியர் நிறுவனத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பைபாஸ் சாலை கொரியர் பார்சல் அலுவலகத்திற்கு நேற்று ஜாஸ்வா என்ற பெயரில் ஆந்திராவிலிருந்து பார்சல் வந்துள்ளது. மதுரை செல்லத்தம்மன் கோவில் தெரு விக்கி என்ற விலாசத்திற்கு மரப்பொம்மைகள் என்ற பெயரில் பார்சல் வந்துள்ளது. பார்சலில் 24 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

The post மர பொம்மை எனக்கூறி பார்சலில் கஞ்சா கடத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Andhra Pradesh ,Jaswa ,Bypass Road Courier Parcel Office ,Dinakaran ,
× RELATED கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்த...