×

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரை தடுக்க என்ன வழி?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறதா? தடுக்க என்ன வழி? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியில் கழிவுநீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் தூய்மையை பாதுகாக்க தவறினால் கூவமாக மாறிவிடும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

The post தாமிரபரணி ஆற்றில் கழிவுநீரை தடுக்க என்ன வழி?: ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,ICourt ,Madurai ,Tamiraparani river ,High Court ,Chief Engineer ,Public ,Works Department ,Dinakaran ,
× RELATED பரக்காணி பகுதியில் வெள்ளத்தில்...