கோவை, ஜூன் 2: கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எந்த மொழி பெரியது என்று கருத்து சொல்ல முடியாது. அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழி முக்கியம். நமக்கு நமது தாய்மொழி முக்கியம். பாமக விவகாரம் என்பது உட்கட்சி பிரச்சனை, அதை பற்றி கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘எந்த மொழி பெரிதுன்னா…’ appeared first on Dinakaran.
