
மைசூர்: கபினி அணையில் இருந்து காவிரியில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் வெளியேற்றம் 30,000 கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
The post கபினி அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.
