- விஜய்
- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இளைஞர் நலன்
- வளர்ச்சி
- உதயநிதி ஸ்டாலின்
- அண்ணா நிறுவனம்
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிருபர்கள், பெற்றோர்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று மாணவர்களிடம் விஜய் கூறியுள்ளாரே என்றனர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின்,‘நல்லது தானே சொல்லி இருக்கிறார். அதில் ஏதாவது பிரச்னையா. நடிகர் விஜய் பேசியது குறித்து அவர் கிட்ட தான் கேட்க வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு முதல்வர் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அமைச்சராக அவர் தொடர்வார். பாஜவின் குரலாக ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
The post விஜய் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.