×

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து

வேலூர்: வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கூட்டுரோட்டில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகாமையில் உள்ள திருமண மண்டபம் பின்புறத்தில் சாலையோரமாக கார் ஒன்று நேற்று மலையில் இருந்து நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கார் இன்று காலை திடீரென 7.30 மணி அளவில் திடீரென்று தீப்பற்றி எரித்ததாக கூறப்படுகிறது.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பெயரில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த தீயை அணைத்தனர், பின்னர் இது குறித்து யாருடைய கார் என்று விசாரணை மேற்கொண்டதில் அந்த கார் பதிவெண் வைத்து விசாரணை செய்ததில் வேலூர் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.

பின்னர் வேப்பூர் காவல் துறையினர் ஞானசேகரனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருடைய மகன் சரண் என்பவர் நேற்று காலை காரை நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண் தொலைபேசியில் கேட்டதற்கு சென்னை சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளார். கார் எரிந்ததற்கு என்ன காரணம் என்று வேப்பூர் போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்