×

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆக.27ம் தேதி முதல் செப்.10 வரை 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆக.27ம் தேதிமுதல் செப்.10ம் தேதி வரை 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 1,050 சிறப்பு பேருந்துகள் ஆக.27ம் தேதிமுதல் செப்.10ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக, மொத்தம் 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post வேளாங்கண்ணி ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆக.27ம் தேதி முதல் செப்.10 வரை 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Velankanni temple festival ,Managing Director ,Transport Corporation ,Chennai ,Velankanni Holy Mother Arogya Mata temple festival ,Mohan ,Government Rapid Transport Corporation ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்