×

பியூட்டி பார்லரில் ரூ.50 ஆயிரம் திருட்டு

புழல்: செங்குன்றம் அருகே, பியூட்டி பார்லரில் ரூ.50 ஆயிரம் திருடிய 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்குன்றம் அருகே எடப்பாளையம், என்.எஸ்.கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (32). இவர் எடப்பாளையம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் பியூட்டி பார்லர் மற்றும் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது பியூட்டி பார்லருக்கு நேற்று முன்தினம் இரவு பர்தா அணிந்த 2 பெண்கள் வாடிக்கையாளர் போல் வந்தனர்.

பின்னர், அவர்கள் பாக்கியலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தபடி, டேபிளில் இருந்த அவரது கைப்பையை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். அதில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்துள்ளன. 2 பெண்களும் வெளியேறிய சிறிது நேரத்துக்கு பிறகுதான் பாக்கியலட்சுமிக்கு, பணம் வைத்திருந்த கைப்பை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.

The post பியூட்டி பார்லரில் ரூ.50 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Senkunram ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பகுதியில் குண்டும்...