×

கேரளாவில் மதுக்கடை, பார்கள் மூடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கேரளாவில் நேற்று முதல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மதுக்கடைகள், மது பார்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கும் தொடர்கிறது. கேரளாவில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குவதாக இருந்தது. அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. 29ம் தேதிவரை இன்னும் 2 தேர்வுகள் மீதம் உள்ளன. இவை தள்ளி வைக்கப்படவில்லை.

Tags : Kerala , Closing of liquor stores and bars in Kerala
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...