×

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல்லில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 75% கூடுதலாக பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre ,Chennai ,Chennai Meteorological Survey Centre ,Meteorological Centre Information ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...