சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 63 சுங்கச்சாவடிகளில் 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. பெரும்பாலான சுங்க சாவடிகளில் முறையான சாலை பராமரிப்பு இல்லாமலும், சாலை உபயோகிப்பாளர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் தான் தொடர்ந்து நீடித்து வருகின்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.
The post சுங்க கட்டண உயர்வுக்கு எஸ்டிபிஐ தலைவர் கண்டனம் appeared first on Dinakaran.