×

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுவிப்பு..!!

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் பாக். ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர். இதனால் வேறு பகுதிக்கு படகுகளை ஓட்டிச் சென்றனர்.

இவர்களில் மண்டபம் பகுதியை சேர்ந்த நாகநாதன், வேலு ஆகியோரின் 2 விசைப்படகுகளை கடற்படையினர் சிறை பிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். கைதான மீனவர்கள் இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மண்டபம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பினர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது படகையும் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Colombo ,Nadu ,Rameswaram ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...