மதுராந்தகம்: மெய்யூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார். மதுராந்தகம் ஒன்றியம் மெய்யூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகத்தில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த முகாமை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கா.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், ஒன்றிய திமுக செயலாளர் சத்தியசாய், மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமி ல், பொது மருத்துவம், இதய மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவம், ரத்த பரிசோதனை, கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், எலும்பு, மூட்டு மருத்துவம், தோல், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
முகாமில், ஜமீன் எண்டத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு சிகிச்சையளித்தனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த மருத்துவ முகாமில் மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
The post மெய்யூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.