×

கருங்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள்

மதுராந்தகம்: கருங்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பழங்குடி மக்களுக்கு சூரிய சக்தி மின் விளக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் எனும் அமைப்பின் சார்பில் மின்சார வசதியற்ற பழங்குடியினர் வசிக்கும் குடிசை வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு இரவு நேரங்களில் வெளிச்சம் ஏற்படுத்தி தரும் நோக்கில் சோலார் மின் விளக்குகளை பல்வேறு பகுதிகளில் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுராந்தகம் அடுத்த கருங்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் மின்சார வசதி இன்றி குடிசை வீடுகளில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு சோலார் மின்விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கருங்குழி பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன் தலைமை தாங்கி சூரிய சக்தி மின்விளக்குகளை அந்த சமூகத்தை சார்ந்த மக்களுக்கு வழங்கினார். இதில் குழந்தைகள் கண்காணிப்பகம் நிர்வாகி ராஜி கலந்து கொண்டு மின்விளக்குகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, பல்வேறு வகையான நீர்நிலை பகுதிகளிலும், ஏரிக்கரை, குட்டை, தாங்கல், குளக்கரை, ஓடை போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசிப்பதால் இவர்கள் பகுதியில் மின் இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், இவர்களின் குழந்தைகள் இரவு நேரங்களில் படிப்பத்திற்கும் பாம்பு, தேள் மற்றும் விஷ பூச்சிகள் கடிப்பதில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் இந்த மின் விளக்குகள் பெரிதும் உதவுகிறது என்றார்.இதில் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கவேல், செல்வராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கருங்குழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு சூரிய சக்தி மின் விளக்குகள் appeared first on Dinakaran.

Tags : Karunkuzhi ,Madhurandakam ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED கருங்குழி ராகவேந்திரா சுவாமிகள்...