×

மணிப்பூரில் ஆம்புலன்சில் மகன், தாய், உறவுபெண் எரித்து கொலை

இம்பால்: மணிப்பூரில் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 8 வயது சிறுவன், அவரது தாயார் மற்றும் பெண் உறவினர் ஆகிய 3 பேர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் மேற்கு இம்பால் நோக்கி சென்றது. திடீரென அந்த ஆம்புலன்சை ஒரு கும்பல் வழிமறித்து அவர்களை தாக்கியது. தொடர்ந்து அந்த கும்பல் ஆம்புலன்சோடு சேர்த்து மூவருக்கும் தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பலியாகினர். மேற்கண்ட சம்பவம் மே 4ம் தேதி காங்போக்பி மாவட்டம் காங்சுப் கிராமத்தில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மணிப்பூரில் ஆம்புலன்சில் மகன், தாய், உறவுபெண் எரித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,
× RELATED வெளிமணிப்பூரில் 81.46% வாக்குப்பதிவு