×

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்த பதில்மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டு பதிவை அல்ல. எனவே, விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Minister ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...