×

சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபர் கைது

சென்னை: சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிசேஷக் ரபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் வெளியான அறிக்கையில்; நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime PS), தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை youtube ல் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற youtube channel நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில் BNS ACT, IT Act, Indecent representation of Women (Prohibition) Act and தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtubeல் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.
விசாரணைக்குப் பின்னர் அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Semmozhi ,Chennai ,Abhishek Rabhi ,YouTube ,Priyani Man ,Chennai Chemmozhi Park ,Chennai Metropolitan ,Chemmozhi ,Park ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...