×

அரசு நிறுவனங்களை விற்று ரூ.50,000 கோடி

பொதுத்துறை நிறுவனங்கள் பங்குகளை விற்று, அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.50,000 கோடி நிதி பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்க யாரும் தயாராக இல்லாததால் இந்த இலக்கு எட்டப்படுவது சந்தேகமே. நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.51,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இது ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. தற்போது வரை வெறும் ரூ.12,504 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்துள்ளதால் இலக்கை எட்டுவது சாத்தியமில்லை. 2017-18, 2018-19ம் நிதியாண்டுகளில் மட்டுமே அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த இலக்கை ஒன்றிய அரசு எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு நிறுவனங்களை விற்று ரூ.50,000 கோடி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!