×

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும் 29ம் தேதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என்றார்.

ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணிவகுப்பு நடக்கிறது. அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : RSS ,Chennai ,Vijayadashami ,Madras High Court ,Justice ,G. Jayachandran ,High Court ,
× RELATED கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய...