×

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய கொள்ளையன் கைது

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய கொள்ளையன் மூர்த்தியை கைது செய்தனர். 68 சம்பவங்களில் சுமார் 1,500 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர். தொடர் கொள்ளையில் ஈடுபட்டு விருதுநகரில் ரூ.4 கோடியில் ராடுமேன் மூர்த்தி நூற்பாலை வாங்கியது அம்பலமானது. கொள்ளையடித்த நகைகளை விற்று விருதுநகர் பேருந்து நிலையம் அருகே 54 சென்ட் நிலம் வாங்கியதும் கண்டுபிடித்துள்ளனர்.

The post கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு ரூ.4 கோடிக்கு நூற்பாலை வாங்கிய கொள்ளையன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Murthy ,Tamil Nadu ,Virudhunagar ,
× RELATED பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை...