×

ராகுல் இன்று ஊட்டி வருகை: தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்

ஊட்டி: ஊட்டிக்கு இன்று வரும் ராகுல்காந்தி, தோடர் பழங்குடியினர் மக்களை சந்தித்து பேசுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்எம்.பி,யாக மீண்டும் பதவி ஏற்ற பின் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல், அங்கிருந்து கார் மூலம் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். அங்கு, முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து அவருடன் தேனீர் அருந்துகிறார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிகிறார். பின்னர், மதிய உணவை முடித்து கொண்டு கூடலூர் செல்லும் வழியில் முத்தநாடு மந்து பகுதியில் உள்ள தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்கிறார். அங்கு பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கோயிலை பார்வையிடுகிறார். அதன்பின், அங்கிருந்து கூடலூர், மசினகுடி, முதுமலை வழியாக கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. ராகுல் ஊட்டி வருகையையொட்டி,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post ராகுல் இன்று ஊட்டி வருகை: தோடர் பழங்குடியின மக்களை சந்திக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ooty ,Rahul Gandhi ,Congress ,Rahul MP ,
× RELATED மாற்றத்தின் புயல் நாடு முழுவதும்...