×

மகாராஷ்டிராவில் நுழையும் முன் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ மாநில தலைவர் சந்திரசேகர் சொல்கிறார்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் நுழையும் முன் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ மாநில தலைவர் சந்திரசேகர் தெரிவித்தார். பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பேட்டி அளித்த ராகுல்,’ மன்னிப்பு கேட்பதற்கு நான் என்ன சாவர்கரா என்று கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநில பா.ஜ தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் நுழையும் முன் சாவர்கர் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தாக்கரே இல்லமான மதோஸ்ரீக்கு செல்வது பற்றி எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் மகாராஷ்டிராவுக்கு வரும் முன்பு சாவர்க்கர் குறித்த தனது கருத்தை திரும்ப பெற வேண்டும்’ என்றார்.

The post மகாராஷ்டிராவில் நுழையும் முன் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பா.ஜ மாநில தலைவர் சந்திரசேகர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Maharashtra ,BJP ,president ,Chandrasekhar ,NAGPUR ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய...