×

தெருநாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த ரூ.20 கோடி

கொரோனா காலத்தில் உரிய இனப்பெருக்க தடை சிகிச்சை திட்டங்கள் நடைமுறைப்படுத்த இயலாமல் போனதால், மாநிலத்தில் பல இடங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை உயர்ந்து, அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. எனவே, விலங்குகள் இனப்பெருக்க தடை திட்டத்தை மேலும், முறையாக செயல்படுத்திடவும், தமிழ்நாட்டின் பல இடங்களில் இயங்கிவரும் இன்பெருக்க தடை மையங்களை மேம்படுத்திடவும் 2024-25ன் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.20 கோடி ஒதுக்கப்படும். மேலும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்படும்.

The post தெருநாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த ரூ.20 கோடி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி...