×

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம்

புதுச்சேரி :புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் அரைமணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4.20க்கு முடிவடையும் என்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கேற்ப 8 பாடவேளைகளாக பள்ளிகள் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் மாற்றப்பட்ட பள்ளி நேரங்கள் ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

The post புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அரசுப் பள்ளிகளில் நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CBSE ,Puducherry ,Dinakaran ,
× RELATED கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை