×

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி முதியோருக்கு அன்னதானம்

மதுராந்தகம்: ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கம் மத்திய வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மத்திய வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.

அச்சிறுப்பாக்கம் மத்திய வட்டார தலைவர் கோட்டீஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 50க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு அறுசுவை உணவினை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தனசேகர், எஸ்.எஸ்.ஏ.நாசர், அன்பரசு, திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி முதியோருக்கு அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Achirupakkam Central District Congress Party ,Chengalpattu District ,
× RELATED ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்;...