×

பஸ் மோதி பால் வியாபாரி பலி

காளையார்கோவில், டிச.2: காளையார்கோவில் அருகே ஒட்டாணம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி மைக்கில் சூசையப்பர். இவர், டூவீலரில் மதுரை-தொண்டி நெடுஞ்சாலையை கடக்கும் போது, தேவகோட்டையில் இருந்து காளையார்கோவிலை நோக்கி வந்த தனியார் பஸ் மோதி விபத்தில் படுகாயமடைந்தார். பலத்த காயங்களுடன் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து காளையார்கோவிலில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Milk dealer ,
× RELATED கண்ெடய்னரில் மோதி பால் வியாபாரி பலி