×

கண்ெடய்னரில் மோதி பால் வியாபாரி பலி

கரூர் மாவட்டம் மண்மங்கலம் மேலஒரத்தையை சேர்ந்தவர் மகேஸ்வரன்(35). பால் வியாபாரி. இவர் கடந்த 25ம் தேதி மாலை பைக்கில் சேலம் பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இவரின் பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இந்த விபத்து சம்பவம் குறித்து வெங்கமேடு போலீசார் கண்டெய்னர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kidnipper ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்