×

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நடமாடும் மருத்துவ குழுவினர் ஆய்வு சென்னையில் நடக்கும் மாநாட்டுக்கு செல்வதை தடுத்ததால் பாமகவினர் மறியல் போராட்டம்

ஜெயங்கொண்டம், டிச. 2: சென்னையில் பாமகவின் 20 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான மாநாடு நடப்பதால் அரியலூர் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமக பொறுப்பாளர்கள் தலைமையில் தொண்டர்கள் நேற்று முன்தினம் இரவு சென்றனர். இந்நிலையில் நேற்று தனியார் பேருந்துகளில் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையிலும், ஜெயங்கொண்டத்தில் நகர செயலாளர் மாதவன் தேவா தலைமையிலும் பாமகவினர் சென்றனர். அப்போது ஜெயங்கொண்டம் போலீசார், கொரோனா மற்றும் 144 தடை உத்தரவுகளை காரணம் காண்பித்து திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி போலீசார் தடுத்தனர். இதையடுத்து பாமகவினர் சம்பவ இடத்திலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : team ,municipality ,conference ,Jayangondam ,Chennai ,
× RELATED அய்யலூர் பேரூராட்சியில்...