×

விருதுநகரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

விருதுநகர்,நவ. 23: விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் சேவை செய்ய மற்றும் தன்னார்வ மனப்பான்மையுடன் பணியாற்ற ஆட்கள் தேர்வு நேற்று  மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நேரில் வந்து கலந்து கொண்டனர்.  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி உட்கோட்டத்தில் வசிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதில் 606 ஆண்களும், 109 பெண்களும் கலந்து கொண்டனர்.  சான்றிதழ் சரிபார்த்து தேர்வு எஸ்பி பெருமாள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்றது.

Tags : men ,Virudhunagar ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்