×

பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

பெரம்பலூர், நவ.21:முருகனுக்கு உகந்த கார்த்திகை மாதக் கந்தசஷ்டிக் கவசத்தையொட்டி நேற்று பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில், கந்த சஷ்டிப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதனை யொட்டி கோயில்குருக்கள் மணி தலைமையில் பா முருகனுக்கு மஞ்சள், சந்த னம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களாலும், பாலாலும், பஞ்சாமிர்தத்தா லும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

விழாவில் கந்த சஷ்டியை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிக ளில் சஷ்டி விரதமிருந்து முருகனை வழிபடத் திரண் டுக் காத்திருந்த நூற்றுக் கணக்கான பெண்கள் உள் ளிட்ட பக்தர்கள் பால முருகனுக்குநடத்தப்பட்ட அபிஷே க ஆராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் பக்தர்கள் அனை வருக்கும் பிரசாதம் வழங் கப்பட்டது.

Tags : festival ,Balamurugan temple ,
× RELATED வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு