×

கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் திடீர் பணியிட மாற்றம்

கொள்ளிடம், நவ.12: கொள்ளிடம் காவல்நிலையத்தில் பெண் கொடுத்த ஒரு புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சீர்காழி டிஎஸ்பி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அங்குள்ள சிலர் பாலியல் தொந்தரவு செய்ததாக கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி சீர்காழி டிஎஸ்பி அலுவலகம் முன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் வனிதா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Kollidam Inspector ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு