×

புதுச்சேரியில் 102 பேருக்கு கொரோனா 2 பேர் பலி

புதுச்சேரி, நவ. 11: சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3721 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 57, காரைக்காலில் 10, ஏனாமில் 2, மாகேவில் 33 என மொத்தம் 102 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், காரைக்காலை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 103 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் 56 பேரும், காரைக்காலில் 2 பேரும், ஏனாமில் 11 பேரும், மாகேவில் 44 பேரும் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95.3 சதவீதமாக உள்ளது. 343 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டு தனிமைப்படுத்தலில் 728 பேர் இருந்து வருகின்றனர். நமது முக்கிய பண்டிகையான தீபாவளி 14ம் தேதி வருகிறது. இதையொட்டி வரும் 3 நாட்களும் நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். நண்பர்களை சந்திக்கும்போதும், பொருட்கள் வாங்க கடைவீதிகளுக்கு வரும்போதும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், என்றார்

Tags : Corona ,Pondicherry ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...