×

கொள்ளிடம் ஆற்றில் புைதக்கப்பட்டிருந்த பெண் சடலம் தோண்டி எடுப்பு

திருக்காட்டுப்பள்ளி, நவ. 11: கல்லணை அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கி வந்த இடம் அருகில் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக தோகூர் காவல் நிலையத்தில் விஏஓ புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சென்று பார்வையிட்டனர். பின்னர் பூதலூர் தாசில்தார் அருணகிரி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது இறந்தவர் 30 வயதுக்குட்ட பெண் என்பதும், உடலில் துணி ஏதுமின்றி புதைக்கப்பட்டிருந்ததும்தெரியவந்தது. இதையடுத்து சடலம் பரிசோதனை சம்பவ இடத்திலேயே நடந்தது. இதுகுறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்று விசாரித்து வருகின்றனர்.

Tags : river ,Kollidam ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்