×

நாகர்கோவிலில் வாகன ஓட்டிகள் அலைக்கழிப்பு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கண்டனம்

நாகர்கோவில்: திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தமிழக முதல்வர் வருகைக்காக நாகர்கோவில் நகர பகுதியில் இன்று (நேற்று) காலை முதலே நகரின் முக்கியமான பகுதிகளிலும், சந்திப்புகளிலும் போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  பல்வேறு பகுதிகளில் போலீசார் போக்குவரத்தை தடை செய்து வாகனங்களை மாற்றிவிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நான்கு நாள்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் வணிக, வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் வாங்க வருகை தருகின்றனர். கொரோனாவுக்கு பின்னர் தற்போது தான் கடைகளில் வியாபாரம் நடைபெற தொடங்கியுள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் போலீசாரின் நடவடிக்கைகள் உள்ளது.  நாளை (இன்று) வருகின்ற முதல்வருக்காக இன்றே வாகன போக்குவரத்தை மாற்றிவிடுவதும்,  தடை செய்வதும் கண்டனத்திற்குரியது.

Tags : Sureshrajan MLA ,Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...